ஹரியானாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் போராட்டம்- இணையசேவை முடக்கம், 144 தடை உத்தரவு!
சண்டிகர்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு ஹரியானாவில் ஜாட் இனத்தினர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இணையசேவை துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் ஜாட் இனத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஜாட் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மாநில சட்டசபையில் புதிய சட்டம் ஒன்றை அரசு இயற்றியது. ஆனால் இந்த சட்டத்துக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த ஜாட் இனத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதை முன்வைத்து நேற்று மாநிலம் முழுவதும் ஜாட் சமூகத்தினரின் போராட்டம் தொடங்கியது. ஜாட் இனத்தினரின் இந்த போராட்ட அழைப்பை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இப் போராட்டம் தொடர்பாக வதந்திகளை தடுக்கும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள், செல்போன் எஸ்.எம்.எஸ். சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன. ஜாட் இனத்தினர் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளதால் ஹரியானாவில் பெரும்பாலான பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications