மத்திய அரசுக்கு ஆதரவா? "தேவைப்படும் போது முடிவு" - ஜெ. பேட்டி
டெல்லி: ராஜ்யசபாவில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது குறித்து தேவைப்படும் போது முடிவெடுப்போம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சந்தித்துப் பேசினார். சுமார் 50 நிமிட நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது 64 பக்க கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார். அதில் தமிழக வாழ்வாதார பிரச்சனைகள், ஈழத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, தமிழகத்துக்கான நிதித் திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழகத்துக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதிகயை விரைந்து தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குழுவை விரைவில் அமைக்கவும் வலியுறுத்தினேன். கூடங்குளம், நெய்வேலி மின்சாரத்தில் 15% தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கோரினேன்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை தேவை; பஹ்ரைனில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கைகளை மிகவும் பரிவுடன் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.
அப்போது ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, லோக்சபாவில் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரவு அளிகக் தேவையில்லை. ராஜ்யசபாவில் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதற்கேற்ப அப்போது முடிவு எடுக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications