காங்கிரஸுக்கு குட்பை சொல்லும் ஜோதிராதித்ய சிந்தியா- தனிக்கட்சியா? பாஜகவா?
போபால்: காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விரைவில் விலகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸை விட்டு வெளியேறும் ஜோதிராதித்ய சிந்தியா தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது பாஜகவில் ஐக்கியமாவாரா என்கிற புதிருக்கு விடை கிடைக்கவில்லை.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஜோதிராதித்ய சிந்தியாவின் பெயர் அடிபட்டது. ஆனால் மூத்த தலைவரான கமல்நாத்துக்கு முதல்வர் பதவி கிடைத்தது.

அப்போது முதலே ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில்தான் இருந்து வருகிறார். லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கமல்நாத் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து தம்மை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனால் டெல்லி மேலிடம் சிந்தியாவை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்தது ஆகிய மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார் சிந்தியா. இது காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா எந்த நேரத்திலும் காங்கிரஸை விட்டு வெளியேறலாம் என கூறப்படுகிறது. அப்படி காங்கிரஸில் இருந்து விலகும் அவர் தனிக்கட்சி தொடங்குவாரா? பாஜகவில் ஐக்கியமாவாரா? என்பதுதான் இப்போதைய விவாதம்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications