காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் அதிரடி வாதம்
டெல்லி: காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் சார்பில் வாதிடப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இவற்றின் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் கர்நாடக அரசின் வாதம் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, கேரள அரசு வாதம் முன் வைத்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கேரள அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி வாதம் முன் வைத்தார்.
கேரளாவின் வாதம் நிறைவுற்ற நிலையில், தமிழகம் இன்று வாதத்தை தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதங்களை முன்வைத்து வருகிறார்.
அவர் வாதிடுகையில், காவிரி நதிநீர் உத்தரவுகளை மீறுவதாக கர்நாடகா மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். தான் செய்வதே சரி என்ற போக்கில் கர்நாடகா செயல்படுகிறது என்று கடுமையான வாதத்தை தமிழகம் முன் வைத்தது.
கர்நாடகா மட்டுமின்றி, மத்திய அரசும் காவிரி பங்கீடு விவகாரத்தில் முறையாக செயல்படவில்லை என்றும், காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், கர்நாடகா ஒழுங்காக தண்ணீர் தராததால் தமிழகத்தில் விவசாய நிலம் குறைந்துவிட்டது என்றும், தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காவிரி கர்நாடகாவில் உற்பத்தியாகிறது என்பதற்காக அந்த மாநிலம் உரிமை கொண்டாட முடியாது என்றும் தமிழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகா எதிர்க்க முடியுமா என கேள்வி எழுப்பினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications