விதிமுறைகளை மீறியதாக சசிகலா மீது குற்றம்சாட்டிய அதிகாரி ரூபாவுக்கு கர்நாடக அரசு நெருக்கடி!
பெங்களூர்: பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த 'குற்றத்திற்காக' ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது கர்நாடக அரசு.
பெங்களூர் மத்திய சிறையில் உள்ள சசிகலா உள்ளிட்டோருக்கு பணத்தை பெற்றுக்கொண்டு சலுகைகள் செய்து கொடுத்துள்ள தகவலை போலீஸ் டிஜிபிக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தினார் சிறைத்துறை டிஐஜி ரூபா.
இந்த கடித விவகாரம் ஊடகங்களில் லீக்கானது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ரூபா அவ்வப்போது நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ரூபாவுக்கு நோட்டீஸ்
இவ்வாறு ரூபா பேட்டியளித்துவந்த நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை முதல்வர் சித்தராமையா இன்று தெரிவித்தார்.

அரசிடம் கூறியிருக்கலாம்
சித்தராமையா கூறுகையில், "சிறையில் முறைகேடு நடப்பது தெரியவந்தால், அதை உயர் அதிகாரிகள் கவனத்திற்கோ அல்லது அரசின் கவனத்திற்கோ ரூபா கொண்டுவந்திருக்க வேண்டும். அதைவிடுத்து நேரடியாக பத்திரிகைகளை நாடிவிட்டார் ரூபா. அதிகாரிகள் நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது என்பது விதிமுறை. இந்த விதிமுறையை மீறியதற்காக ரூபாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்கட்டும்
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த ரூபா, தான் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார். தான் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதம் கன்னட சேனலில் முதலில் வெளியானதாகவும், அது எப்படி என தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.

குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ரூ.2 கோடியை சிறைத்துறை டிஜிபிக்கு வழங்கி சிறப்பு மாடுலர் கிச்சன் உள்ளிட்ட சலுகைகளை அனுபவித்து வந்ததாக ரூபா தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவருக்கே கர்நாடக அரசு நெருக்கடி கொடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, ரூபாவின் செயலை டிவிட்டரில் பாராட்டியுள்ளார். அவருக்கு ரூபா நன்றி தெரிவித்துள்ளார்.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications