மேகதாதுவில் அணைக்கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.. கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்!
மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக உறுதியாக உள்ளது என கர்நாடக அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா பைரே கவுடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக உறுதியாக உள்ளது என கர்நாடக அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா பைரே கவுடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா பைரே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மேகதாதுவில் ஆணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என்றார்.

மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதால் இரு மாநிலங்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் கர்நாடகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
கர்நாடக தடுப்பணையில் தேக்கப்படும் தண்ணீர் தமிழத்திற்கு பயன்படும் என்றும் அவர் கூறினார். கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியவில்லை என்றும் கர்நாடக வேளாண்துறை அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா பைரே கவுடா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications