நீதிபதி குன்ஹா அவமதிக்கப்பட்ட வழக்கு. வேலூர் மேயர் உள்பட 34 பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பெங்களூரு : தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அவமதிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி உளபட 34 பேருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வருக்கு 2014, செப்.27-இல் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைக் கண்டித்து, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி உள்ளிட்ட 34 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தர்மபால், ஜெயகுமார் ஹிரேமத் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மோகன் சாந்தன கெüடர், பூதியால் ஆகியோர் முன் நேற்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதா மீதான தீர்ப்பில் நீதிபதி குன்ஹாவை அவமதிக்கும் வகையில், வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி போராட்டம் நடத்தியுள்ளார்.
மேலும், வேலூர் மாநகராட்சியில் குன்ஹாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நீதிபதி குன்ஹாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நீதித் துறையையே அவமதிக்கும் செயலாகும். எனவே, வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த வழக்கில் வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி உள்பட 34 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications