புகாரில் நடவடிக்கை இல்லை, அதனால்தான்.. லோக்ஆயுக்தா நீதிபதியை கத்தியால் குத்தியவர் வாக்குமூலம்
தான் வழங்கிய புகார்கள் எதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை கத்தியால் குத்தியதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.
பெங்களூர்: தான் வழங்கிய புகார்கள் எதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை கத்தியால் குத்தியதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.
லோக்ஆயுக்தா அலுவலகத்தில் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி வழக்கு ஒன்று தொடர்பாக விசாரித்துக்கொண்டிருந்தபோது, தேஜராஜ் ஷர்மா என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். அவரது உடலில் மூன்றிற்கும் அதிகமான இடங்களில் கத்தி குத்து இருந்துள்ளது.

காயமடைந்த விஸ்வநாத் ஷெட்டி, அருகேயுள்ள மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு வயிறு, நெஞ்சு பகுதி மற்றும் இடது கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த குற்றத்தை செய்த தேஜராஜ் ஷர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். போலீஸ் அவரை கடந்த நான்கு மணி நேரமாக விசாரித்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்து இருக்கிறது.
தேஜராஜ் ஷர்மா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கர்நாடகாவில் பல வருடங்களுக்கு முன்பாகவே குடிபெயர்ந்து இருக்கிறார். இவர் அங்கு ஐயூர்க்கும் தமுக்குரில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார்.
அரசு அலுவலகங்களுக்கு பர்னிச்சர் அனுப்பும் ஒப்பந்தத்திற்கு இவரிடம் அதிகாரிங்கள் லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து இவர் லோக்ஆயுக்தா அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார். ஆனால் பல வாரங்களாக இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை பார்க்க காலையிலேயே அனுமதி வாங்கி இருக்கிறார். அப்போதுதான் அவர் உள்ளே சென்றவுடன் கத்தியால் குத்தியுள்ளார்.
இதற்கு ஏற்கனவே அவர் திட்டமிட்டு இருந்ததாக கூறியுள்ளார். தற்போது லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications