காவிரி: கர்நாடகாவில் இன்று ரயில் மறியல் போராட்டம்- ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுகிறது கர்நாடகா. ஆனால் இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ரயில் மறியல் போராட்டம்
கடந்த 2 வார காலமாக கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை பெருமளவில் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கன்னட இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார்.

1 லட்சம் பேர்
இன்றைய மறியல் போராட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கபர் எனவும் அவர் கூறியிருந்தார். இருப்பினும் கர்நாடகாவில் இன்று காலை முதல் ரயில்கள் முழு அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

போலீசார் குவிப்பு
இந்த போராட்ட அறிவிப்பை அடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 9480802140 என்ற எண்ணில் ரயில் சேவை குறித்த தகவல்களை அறியலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

போராட்டம் தொடரும்
முன்னதாக நேற்று மைசூரு வங்கி சர்க்கிளில் போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் நாளை காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறியிருந்தார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications