பணப் பற்றாக்குறை எதிரொலி…. கோழிக்கோடு கனரா வங்கிக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோழிக்கோடு கனரா வங்கியில் போதிய பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் வங்கிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம், வங்கியின் துணை மேலாளர் மனு அளித்துள்ளார்.
கோழிக்கோடு: 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு கனரா வங்கியில் போதிய பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் வங்கியை தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் அதன் துணை மேலாளர் அந்த மாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நவம்பர்.8 ஆம் தேதி நள்ளிரவு முதல் 500 1000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பினால் நாடுமுழுவதும மக்கள் வங்கிக் கிளைகளில் காத்துக் கிடக்கும் அவலம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரத்தில் மக்கள் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தும் அவலங்களும் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் கோழிக்கோடு கனரா வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கவும், காசோலைகளுக்கு பணம் வழங்கவும் போதிய பணம் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பணம் விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அந்த வங்கி மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் வங்கி அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. அதனைத்தொடரந்து வங்கிக்கும் அதன் ஊழியர்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியரிடம் அந்த வங்கியின் துணை மேலாளர் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பணப்பற்றாக்குறையினால் வங்கிக்கு பாதுகாப்பு கேட்டு அதிகாரிகள் மனு அளித்திருப்பது அங்குள்ள மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications