கேரளா வெள்ளம்: நகரமயமாக்கலும் முக்கிய காரணம்.. முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றமும் நகரமயமாக்கலும்தான் காரணம் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றமும் நகரமயமாக்கலும்தான் காரணம் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார்.
இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. இதனால் அங்கே பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளா வெள்ளம் குறித்து முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார்.
அதில், கடைசியாக கேரளாவில் 2013ல் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தது. அப்போது 26 விழுக்காடு அதிகம் பெய்தது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் பெய்வதுதான் தென்மேற்கு பருவமழை ஆகும்.
ஆனால் இந்த முறை கேரளாவில் தென்மேற்கு பருவமழை 30 விழுக்காடு அதிகம் பெய்துள்ளது. 10 சென்டிமீட்டர் பெய்ய பெய்ய வேண்டிய இடத்தில் 35 சென்டிமீட்டர் பெய்துள்ளது. முக்கியமாக கடந்த 8ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை அதிக மழை பெய்துள்ளது.
கேரளவில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தது வெள்ளத்திற்கு ஒரு காரணம் ஆகும். அதேபோல் நகரமாயம்மாக்கள் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.
இதேபோல் அதிக மழை பெய்தால் மற்ற மாநிலத்திற்கும் வெள்ளம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2016ல் சென்னையில் 53 விழுக்காடு அதிகமாக இயல்பைவிட மழை பெய்தது.
2005ல் 79 விழுக்காடு அதிகம் சென்னையில் இயல்பைவிட மழை பெய்தது. அப்போது அதுதான் வெள்ளத்திற்கு காரணமாகும். ஆனால் கேரளாவில் மழை மட்டுமில்லாமல் நகரம்மயமாக்கலும் பெரிய காரணம் என்றுள்ளார்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications