"டேபிள் டாப் ரன்வே".. கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான ஓடுபாதை.. பதற வைக்கும் பின்னணி!
கோழிக்கோட்டில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் அந்த விமான நிலையத்தின் வடிவமைப்பும்,அதன் ஓடுபாதை நீளமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள் .
கோழிக்கோடு: கோழிக்கோட்டில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் அந்த விமான நிலையத்தின் வடிவமைப்பும்,அதன் ஓடுபாதை நீளமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள் .
Recommended Video
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்த விமானம் கோழிக்கோட்டில் இருக்கும் கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளது.
இந்த விமான விபத்து மாலை 7.40 மணிக்கு நடந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இப்படி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விமானத்தின் பைலட்கள் இருவரும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

மோசமான தகவல்
இந்த விமானத்தில் 184 பேர் இருந்துள்ளனர். இவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இந்த விமான விபத்திற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது . ஒன்று மோசமான வானிலை. மழை காரணமாக விமான ஓடுபாதை வழுக்கி இருக்கிறது. இதனால் விமானம் நிலைதடுமாறி ஓடுபாதையில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதனால் விமானம் பிளந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

காரணம் 2
இந்த விபத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதன்படி, இந்த கோழிக்கோடு விமான நிலையம் மலை மீது அமைந்து இருக்கும் விமான நிலையம் ஆகும். கேரளாவில் இருக்கும் ஒரே Tabletop runway கொண்ட விமானம் நிலையம் இது ஆகும். டேபிள் டாப் ரன்வே என்பது மலை மீது அமைக்கப்பட்டு இருக்கும் , அல்லது உயரமான இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஓடுபாதை கொண்ட விமான நிலையம் ஆகும்.

வாய்ப்பு உள்ளது
உயரமான குன்று மீது விமான நிலையம் இருப்பதால், இங்கு விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. கேரளாவில் இருக்கும் ஒரே டேபிள் டாப் ரன்வே விமான நிலையம் கோழிக்கோடுதான். இந்த விமான நிலையத்தின் டேபிள் டாப் ரன்வே நீளம் வெறும் 2850 மீட்டர்தான். பொதுவாக 3150 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த விமான ஓடுபதையில் விமானத்தை இறக்குவது மிகவும் கடினம்.

மிக கடினம்
அந்த ஓடுபாதையில் பெரிய விமானங்களை இயக்குவது மிக மிக கடினம் ஆகும். இந்த நிலையில் கோழிக்கோடு விமான ஓடுபாதை நீளம் குறைவாக இருக்கிறது என்று ஏற்கனவே புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 385 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அதற்கு இந்த பகுதி மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

1500 குடும்பம்
அந்த ரன் வே அருகே 1500 குடும்பங்கள் வசிக்கிறது. இந்த குடும்பங்கள் தங்கள் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் விமான நிலைய ஊடுபாதையை விரிவாக்க முடியவில்லை. இப்படி சின்ன ஓடுபாதை கொண்டு இருந்ததும் கூட விபத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications