"டேபிள் டாப் ரன்வே".. கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான ஓடுபாதை.. பதற வைக்கும் பின்னணி!
கோழிக்கோட்டில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் அந்த விமான நிலையத்தின் வடிவமைப்பும்,அதன் ஓடுபாதை நீளமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள் .
கோழிக்கோடு: கோழிக்கோட்டில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் அந்த விமான நிலையத்தின் வடிவமைப்பும்,அதன் ஓடுபாதை நீளமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள் .
Recommended Video
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்த விமானம் கோழிக்கோட்டில் இருக்கும் கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளது.
இந்த விமான விபத்து மாலை 7.40 மணிக்கு நடந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இப்படி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விமானத்தின் பைலட்கள் இருவரும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

மோசமான தகவல்
இந்த விமானத்தில் 184 பேர் இருந்துள்ளனர். இவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இந்த விமான விபத்திற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது . ஒன்று மோசமான வானிலை. மழை காரணமாக விமான ஓடுபாதை வழுக்கி இருக்கிறது. இதனால் விமானம் நிலைதடுமாறி ஓடுபாதையில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதனால் விமானம் பிளந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

காரணம் 2
இந்த விபத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதன்படி, இந்த கோழிக்கோடு விமான நிலையம் மலை மீது அமைந்து இருக்கும் விமான நிலையம் ஆகும். கேரளாவில் இருக்கும் ஒரே Tabletop runway கொண்ட விமானம் நிலையம் இது ஆகும். டேபிள் டாப் ரன்வே என்பது மலை மீது அமைக்கப்பட்டு இருக்கும் , அல்லது உயரமான இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஓடுபாதை கொண்ட விமான நிலையம் ஆகும்.

வாய்ப்பு உள்ளது
உயரமான குன்று மீது விமான நிலையம் இருப்பதால், இங்கு விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. கேரளாவில் இருக்கும் ஒரே டேபிள் டாப் ரன்வே விமான நிலையம் கோழிக்கோடுதான். இந்த விமான நிலையத்தின் டேபிள் டாப் ரன்வே நீளம் வெறும் 2850 மீட்டர்தான். பொதுவாக 3150 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த விமான ஓடுபதையில் விமானத்தை இறக்குவது மிகவும் கடினம்.

மிக கடினம்
அந்த ஓடுபாதையில் பெரிய விமானங்களை இயக்குவது மிக மிக கடினம் ஆகும். இந்த நிலையில் கோழிக்கோடு விமான ஓடுபாதை நீளம் குறைவாக இருக்கிறது என்று ஏற்கனவே புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 385 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அதற்கு இந்த பகுதி மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

1500 குடும்பம்
அந்த ரன் வே அருகே 1500 குடும்பங்கள் வசிக்கிறது. இந்த குடும்பங்கள் தங்கள் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் விமான நிலைய ஊடுபாதையை விரிவாக்க முடியவில்லை. இப்படி சின்ன ஓடுபாதை கொண்டு இருந்ததும் கூட விபத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications