வக்கீல் கொலை வழக்கு..ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி மகள் கைது - சிபிஐ அதிரடி

கொலை வழக்கில் ஹிமாச்சல் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சிம்லா: துப்பாக்கிச்சுடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரதீப் சிங் கொலை வழக்கில் ஹிமாச்சலப்பிரதேச ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி சபினா சிங்கின் மகள் கல்யாணி சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது.

Recommended Video

    June 16 | காலை முக்கியச்செய்திகள் | Oneindia Tamil

    தேசிய துப்பாக்கிச்சுடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரீத் சிங் 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். சண்டிகர், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வசித்து வந்த தேசிய துப்பாக்கிச்சுடுதல் வீரர் சுக்மன்பிரதீப் சிங். 35 வயதான சுக்மன் வழக்கறிஞராகவும் பணியாற்றிவந்தார். இவரது தந்தையான எஸ்எஸ் சிந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா ஹைகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

    Lawyer murder case: Himachal Pradesh Chief Justices daughter arrested by the CBI

    இதனிடையே, சுக்மன் கடந்த 2015 செப்டம்பர் 15-ம் தேதி சண்டிகரில் உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுக்மனை சுட்டுக்கொன்றது யார்? என போலீசார் விசாரித்துவந்தனர். ஆனால், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு 2016ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இந்த வழக்கில் எதேனும் தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சம்மானத்தொகை கடந்த ஆண்டு 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச்சுடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரதீப் சிங் கொலை வழக்கில் முதல் நபரை சிபிஐ நேற்று கைது செய்துள்ளது.

    ஹிமாச்சலப்பிரதேச ஹைகோர்ட் தலைமை நீதிபதி சபினா சிங்கின் மகள் கல்யாணி சிங்கை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சுக்மன் பிரதீப் கொலை வழக்கில் கல்யாணி சிங்கிற்கு தொடர்பு உள்ளதா? என நீண்டநாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது, இந்த கொலை வழக்கில் கல்யாணி கைது செய்யப்பட்டுள்ளார்.

    சிபிஐ நடத்திய விசாரணையில் சித்துவும் கல்யாணி சிங் என்பவரும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராகமல் கல்யாணி சிங் தப்ப முயற்சித்தார். சிபிஐ அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் சித்து கொல்லப்பட்டபோது அவரை துப்பாக்கியால் சுட்ட நபருடன் கல்யாணி சிங் உடன் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து, சபீனா சிங்கின் மகள் கல்யாணி சிங்கை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவரை சண்டிகரில் உள்ள சிறப்பு நீதிமன்ற கூடுதல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, 4 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    சுக்மன் பிரதீப்பிற்கும் கல்யாணி சிங்கும் இடையே பழக்கம் இருந்துள்ளதாகவும், ஆனால் பிரச்சினை காரணமாக இந்த உறவில் ஏற்பட்ட விரிசலே சுக்மன் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுக்மன் கொல்லப்பட்டபோது அவரை துப்பாக்கியால் சுட்ட நபருடன் கல்யாணி சிங் உடன் இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரர் சுக்மன் சிங் கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின் முதல் கைது நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+