"இந்தியா" கூட்டணியை உடைக்கும் நிதிஷ்குமார்? டிச. 29-ல் ஜேடியூ தேசிய கவுன்சில் கூட்டத்தில் அதிரடி?
பாட்னா: "இந்தியா" கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் கடும் அதிருப்தியில் இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தை டிசம்பர் 29-ல் கூட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற "இந்தியா" கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் நிதிஷ்குமாரை ரொம்பவே பாடாய் படுத்திவிட்டதாம். அதுவும் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பரிந்துரைத்தத்தை அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லையாம்.

சமாதானப்படுத்திய ராகுல் காந்தி: நிதிஷ்குமாரின் இந்த கடும் கோபத்தையும் அதிருப்தியையும் புரிந்து கொண்டுதான் ராகுல் காந்தி, உடனே அவருக்கு போன் செய்து சமாதானப்படுத்தி பார்த்தார். ஆனால் நிதிஷ்குமாரின் ஆத்திரமும் ஆவேசமும் இன்னமும் அடங்கவில்லை. இதனையடுத்து அடுத்து என்ன செய்யலாம்? என்பது குறித்து விவாதிக்க வரும் 29-ந் தேதி ஜேடியூவின் தேசிய கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ளார் நிதிஷ்குமார். இதற்கு முன்னர் எல்லாம் ஜேடியூவின் தேசிய செயற்குழு கூடிதான் முக்கிய முடிவுகளை எடுத்து வந்தது.
யாருங்க இந்த மல்லிகார்ஜூன கார்கே?: ஜேடியூவின் அதிருப்தி, நிதிஷ்குமாரின் கோபம் குறித்து ஜேடியூ மூத்த தலைவர் கோபால் மண்டல் கூறியதாவது: மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள். மல்லிகார்ஜூன கார்கே என்றால் யார் என்றே மக்களுக்கு தெரியாது. எனக்கே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான பின்னர்தான் அவரைத் தெரியும். சாமானிய மக்கள் யாருக்குமே மல்லிகார்ஜூன கார்கேவை தெரியாது. ஆனால் நிதிஷ்குமார் என்றால் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாட்டு மக்கள் நன்கு அறிந்த நிதிஷ்குமார் பிரதமராகலாம்.
நிதிஷ்தான் பிரதமர் வேட்பாளர்: இந்தியா கூட்டணி என்ற அமைப்புக்கு விதை போட்டவர் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணியின் அறிவிக்கப்படாத ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு அத்தனை மாநில கட்சிகளையும் ஒன்று சேர்த்தவர் நிதிஷ்குமார். ஆகையால் அத்தனை மாநில கட்சிகளுமே பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரைத்தான் தேர்வு செய்ய வேண்டும். பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு கோபால் மண்டல் கூறினார்.
ஜேடியூ தேசிய கவுன்சில் கூட்டம்: இந்த பின்னணியில் டிசம்பர் 29-ல் ஜேடியூ கூட்டும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியில் நீடிப்பதா? இல்லை நிபந்தனைகளை விதிப்பதா? அல்லது மீண்டும் பாஜக கூட்டணிக்கே திரும்பி ஓடுவதா? என்பது குறித்து விவாதித்து அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆக ஒரு பிரளயத்துக்கு காத்திருக்கிறது "இந்தியா" கூட்டணி!
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications