மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதா? கொதித்தெழுந்த மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனைக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக, திரிணாமுல் கட்சியினர் அதி தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.

சக்கர நாற்காலியில் பிரசாரம்
பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி ஒன் வுமன் ஆர்மியாக மாநிலம் முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே அவரது காலில் அடிபட்டதால், காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கவனரிடம் மம்தா புகார்
பாஜகவின் மோடி, அமித்ஷா மம்தா பானர்ஜியும், மம்தா பானர்ஜி பாஜகவையும் தாக்கி பேசி வார்த்தையால் மோதிக் கொண்டனர். மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தபோது பாஜகவினர் வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவதாகவும், மக்களை ஓட்டு போட விடாமல் தடுப்பதாகவும் மாநில கவர்னரிடம் வாக்குச்சாவடியில் இருந்தபடியே போன் செய்து புகார் செய்தார் மம்தா பானர்ஜி.

வருமான வரி சோதனைக்கு கண்டனம்
இந்த நிலையில் ஹவுராவில் நடந்த பேரணியில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மோடியையும், அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த வருமான வரி துறை சோதனைக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

வங்கத்தை கைப்பற்ற முயற்சி
மோடி சிண்டிகேட் 1; அமித் ஷா சிண்டிகேட் 2 ஆவார்கள். இவர்கள் இருவரும் அபிஷேக்கின் வீடு, சுதீப்பின் வீடு மற்றும் ஸ்டாலினின் மகளின் வீட்டிற்கு ஏஜென்சிகளை அனுப்புகிறார்கள். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளை மாற்றி வருகின்றனர். உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து குண்டர்களைக் கொண்டு குஜராத்திகள்(மோடி, அமித்ஷா) வங்காளத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். குஜராத்தை போல வங்காளத்தை கைப்பற்ற நாம் அனுமதிக்க கூடாது.

மக்கள் கவனமாக இருக்கணும்
மேற்கு வங்கத்தில் வகுப்புவாத குழப்பத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது: இதற்கு மக்கள் இடம் கொடுக்க கூடாது. கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு பணம் கொடுப்பது குறித்து பாஜகவினர் ஏதோ விளக்கம் கொடுக்கின்றனர். நான் உதவி பெற வேண்டிய விவசாயிகளின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளேன். அவர்கள் ஏன் பணத்தை அனுப்பவில்லை? என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications