சியாச்சினில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: பாரிக்கர் திட்டவட்டம்
டெல்லி: சியாச்சின் பனிமலை சிகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் இரவு, பகல் பாராமல் எல்லை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 23 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த பனிமலையில் கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 10 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுவதால் அங்கிருந்து ராணுவ படைகள் விலக்கிக் கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், படைகளை வாபஸ் பெற முடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய பாரிக்கர், பாகிஸ்தானை நம்ப முடியாது என்பதால் சியாச்சின் சிகரத்தில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்படமாட்டாது.
நாம் படைகளை வாபஸ் பெற்றுவிட்டால், அதனை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் படைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்துவிடலாம். அதன் பின்னர் நாம் மேலும் பல உயிர்களை இழக்க வேண்டியிருக்கும். 1984ல் (சியாச்சின் போர்) என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். எனவே, பாகிஸ்தானை நம்ப முடியாது என கூறினார்.
அண்மையில் சியாச்சின் பனிமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இந்திய வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இனிமேலும் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கோரிக்கை விடுத்திருந்தார். அதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த பாரிக்கர், சியாச்சின் பனிமலை சிகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை தற்போது உள்ள நிலையே அங்கு தொடரும் என்றார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications