இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 10-ஆம் தேதி?... இன்று அல்லது நாளை அறிவிப்பு
நாடு முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வானது வரும் மே 10-ஆம் தேதி நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகிறது.
டெல்லி: தமிழக மாணவர்களின் எம்பிபிஎஸ் கனவுகளில் மண்ணை அள்ளிப்போடும் நீட் தேர்வு வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடத்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
தேசிய தகுதி காண் தேர்வு எனப்படும் நீட் தேர்வானது நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கைக்கு வித்திடுவதாக கூறி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த தேர்வுக்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக இந்த தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட்
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியது. எனினும் அதை மத்திய அரசு செவிமடுத்து கூட கேட்கவில்லை.

நீட் வகுப்புகள்
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா மரணமடைந்தார். இது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து நீட் பயிற்சி மையங்கள் என்று கூறி தெருவுக்கு தெரு பயிற்சி மையங்கள் முளைத்து காசு பார்க்கத் தொடங்கின.

நீட் தேர்வு எப்போது
இந்த ஆண்டு நீட் தேர்வு வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. தமிழக அரசு சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக அரசு நடத்தி வரும் பயிற்சி மையங்கள் போதுமானதா என்பது நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகுதான் தெரியும்.

சிபிஎஸ்இ அறிவிப்பு
நீட் தேர்வானது இந்தி, ஆங்கிலம், உருது, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, ஒரியா, அஸ்ஸாமீஸ், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்தந்த மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதலாம். நீட் தேர்வை எழுத ஒரு மாணவருக்கு இரு முறை எழுதலாம். எனவே கடந்த ஆண்டு தோல்வி அடைந்தவர்களும் இந்த ஆண்டு தேர்வு எழுதுவர். இந்த தேர்வு எப்போது என்பது குறித்து சிபிஎஸ்இ இன்று அல்லது நாளை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications