Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா.. வன்முறையால் ஷில்லாங்கில் ஊரடங்கு

Subscribe to Oneindia Tamil

ஷில்லாங்: முன்னாள் கிளர்ச்சித் தலைவரின் மரணத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால், மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா செய்தார்.

இதனிடையே வன்முறையை கட்டுப்படுத்த இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் நிலைமை மோசமாகி உள்ளதால் அங்கு இணையதள சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Meghayala Home Minister Lahkmen Rymbui Resigns After Violence

போலீசார் அண்மையில் நடத்திய சோதனையின் போது முன்னாள் கிளர்ச்சி குழு தலைவர் செரிஷ்ஸ்டார்ஃபீல்ட் தாங்கீவ் அவரது இல்லத்தில் கொல்லப்பட்டார். இதனால் மேகாலாயா மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. தலைநகர் ஷில்லாங்கில் சுதந்திர தினமான இன்று கடும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டது. இதையடுத்து மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா செய்தார்

மேலும் ரிம்புய் இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு முன்மொழிந்தார், மேலும் முதல்வருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். "உள்துறை (காவல்துறை) துறையை உடனடியாக என்னிடமிருந்து விடுவிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது உண்மையை வெளிக்கொணர அரசாங்கம் எடுத்த சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு உதவும்" என்றார்

இதனிடையே முன்னாள் கிளர்ச்சி குழு தலைவர் செரிஷ்ஸ்டார்ஃபீல்ட் தாங்கீவ்வின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கருப்பு உடையில் மற்றும் கொடி கொடி ஏந்தி பங்கேற்றனர். இதை காவல்துறை நடத்திய படுகொலை என்றே பலர் குற்றம்சாட்டுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+