பெட்ரோல், டீசல் விலையும் ஜிஎஸ்டிக்குள் வரவேண்டும்.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமிக்ஞை!
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர சரியான நேரம் வந்துவிட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் அரசு தலையிடாது என்றும், விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர இதுவே சரியான நேரம் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
தினசரி கணக்கில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் அமலுக்கு வந்தது முதல் கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை சுமார் ரூ. 6க்கு, டீசல் விலை ரூ. 4 வரையும் உயர்வு கண்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் கிடுகிடுவென விலையை உயர்த்தி வருவ்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் ,டீசல் விலையை தினமும் மாற்றும் திட்டத்தில் தலையிட மத்திய அரசு விரும்பவில்லை. சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பதாகவும் விரைவில் விலைகுறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டிக்குள் வர வேண்டும்
பெட்ரோல் ,டீசல் விலையை தினமும் மாற்றும் திட்டத்தில் தலையிட மத்திய அரசு விரும்பவில்லை. பல மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை அதிக அளவில் உயர்த்தியுள்ளன. இதனால் விலையேற்றம் பிரதிபலிக்கிறது, பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டிய சரியான நேரம் இதுவே.

சுங்க வரி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சுங்க வரியை குறைப்பது பற்றி நிதித்துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். மக்களின் விருப்பத்தையும் நாட்டில் நடைபெற வேண்டிய வளர்ச்சி திட்டங்களையும் மத்திய அரசு சமநிலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நிதி ஆதாரம் இல்லை
மிகப்பெரிய அளவிலான தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள், ரயில்வே நவீனமயம் மற்றும் விரிவாக்கம், கிராமப்புற சுகாதாரம், குடிநீர் வசதி, ஆரம்ப சுகாதாரம், கல்வி திட்டங்கள் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடு அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இந்த திட்டங்களுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும்?

பட்ஜெட் பற்றாக்குறை
சுங்க வரி உயர்வால் 2014 - 2015ல் ரூ. 99 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. 2016 - 2017ல் இது 2 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வருவாய் காரணமாக, பட்ஜெட் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் இல்லை
சுங்க வரியில் 42 சதவீதம் மாநில அரசுகளின் அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் நலவாழ்வு திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.32 உயர்ந்து ரூ.70.38க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.36 உயர்ந்து, ரூ.58.72 க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2013, செப்டம்பர் 14ல் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.06க்கு விற்றது எனவே இது அதிக விலை கிடையாதுஎன்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications