'வந்தே பாரத்' ரயில் மீது பயங்கர கல்வீச்சு.. "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் காரணமா? பரபரக்கும் மேற்கு வங்கம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநித்தில் ஹவுராவை நோக்கி சென்ற 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேற்று மர்ம நபர்கள் பயங்கர கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள், வெளிப்புறப் பகுதிகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. இந்த நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுல்ளது.
இந்த ரயில் தொடக்க விழா நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் பங்கேற்ற போது, அங்கிருந்த சிலர் "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் எழுப்பினர். இதில் அப்செட் ஆன மம்தா பானர்ஜி, மேடையில் ஏற மறுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். எனவே, இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தொடங்கி வைத்த மோடி
பிரதமர் நரேந்திர மோடியன் தாயார் ஹீராபென் மோடி கடந்த 30-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மோடி, பின்னர் காணொலி வாயிலாக மேற்கு வங்கத்தில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ஹவுராவில் இருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும். இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மம்தாவை 'டென்ஷன்' ஆக்கிய கோஷம்
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் அழைப்பின் பேரில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர், மம்தா பானர்ஜி மேடை ஏறும்போது "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் எழுப்பினர். பாஜக ஆதரவு கோஷமாக "ஜெய்ஸ்ரீ ராம்" கருதப்படுவதால் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி அடைந்தார். பின்னர், மேடையில் ஏற மறுத்த அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பயங்கர கல்வீச்சு
இந்நிலையில், நேற்று மதியம் ஜல்பாய்குரியில் இருந்து ஹவுரா நோக்கி 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது மாலை 5.50 மணியளவில் குமார்கஞ்ச் ரயில் நிலையத்தை கடந்த போது, வந்தே பாரத் ரயில் மீது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பயங்கர கல்வீச்சில் ஈடுபட்டனர். பெரிய செங்கல்கள், கருங்கற்கள் ரயில் மீது வீசப்பட்டன. இதனால் அச்சத்தில் பயணிகள் அலறினர். சுமார் 10 நிமிடங்கள் இந்த கல்வீச்சு நீடித்தது. இதில், ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. ரயிலின் வெளிப்புறங்களும் பலத்த சேதம் அடைந்தன. எனினும், நல்வாய்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திரிணமூல் தொண்டர்களா?
இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் எழுப்பி மம்தா பானர்ஜியை அதிருப்தி அடையச் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களே இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு திரிணமூல் காங்கிரஸ் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications