மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை! திடுக் தகவல் அம்பலம்
டெல்லி: இரு வருடங்கள் முன்பு உக்ரைன் எல்லையில் வைத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு தொடர்புள்ளதாக டச்சு நாட்டு விசாரணை குழு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி, மலேசியாவிலிருந்து நெதர்லாந்துக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.,17, கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இப்பகுதி ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அவ்விமானத்திலிருந்த 283 பயணிகள் 15 விமான ஊழியர்கள் என மொத்தம் 298 பேர் பலியாகினர்.
இதுகுறித்து நெதர்லாந்து விசாரணைக் குழு தெரிவித்ததாவது: பெர்வோமாய்ஸ்கி என்ற கிராமத்தின் அருகேயுள்ள குறிப்பிட்ட திடல்தான் இந்த ஏவுகணை ஏவப்பட்ட தளம். ரஷ்ய தயாரிப்பான பி.யு.கே (புக்) ஏவுகணைகள், 9-எம்-83 வரிசை எண்ணைக் கொண்ட அந்த ஏவுகணையை வீசும் தளவாடம், ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் ஏவுகணையை இயக்கும் வாகனம் அங்கிருந்து ரஷ்யாவுக்கு திரும்பியுள்ளது. இடைப்பட்ட நேரத்தில் தாக்குதல் நடந்திருக்கிறது.

ரஷ்ய எல்லையிலிருந்து கிழக்கு உக்ரைனுக்குக் கொண்டு வரப்பட்டு, விமானத்தை சுட்டு வீழ்த்திய பிறகு மீண்டும் ரஷ்யாவுக்கே திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இவ்வாறு விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.
ஆனால், இந்த விமானம் வீழ்த்தப்பட்டதில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டினை உக்ரைன் போராளிகள் மீண்டும் மறுத்துள்ளனர். இதே போன்று ரஷ்யாவும் முன்பு இதை மறுத்து வந்தது. இனிமேல் என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications