அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன இளைஞர்- சீன ராணுவம் கண்டுபிடித்ததாக தகவல்
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன இளைஞர், சீன ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அருணாச்சல பிரதேசத்தின் Lungta Jor பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் Miram Taron ஜனவரி 18-ந் தேதி காணாமல் போனார். அருணாச்சல பிரதேச எம்.பி. தபீர் காவோ, சீன ராணுவம்தான் அந்த இளைஞரை கடத்தியதாக குற்றம்சாட்டினார்.

சீனா கடத்தியதாக தகவல்
இது தொடர்பாக ட்விட்டரில் தபீர் காவோ பதிவிட்டிருந்ததாவது: 17 வயது இளைஞரை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. இந்தியப் பகுதிக்குள் நுழைந்து சீன ராணுவம் அந்த இளைஞரை கடத்திச் சென்றுள்ளது. 2018-ல் இந்திய நிலப்பகுதிக்குள் சுமார் 3 முதல் 4 கி.மீ. தொலைவு சாலை அமைத்துள்ளது சீனா. இவ்வாறு தபீர் காவோ பதிவிட்டிருந்தார். மேலும் அந்த இளைஞர் Tsangpo ஆறு இந்தியாவுக்குள் நுழையும் இடத்தில் கடத்தப்பட்டுள்ளார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு மீது விமர்சனம்
இதனைத் தொடர்ந்து சீன ராணுவத்தை இந்திய ராணுவத் தரப்பில் தொடர்பு கொள்ளப்பட்டது. காணாமல் போன இளைஞரை கண்டுபிடித்து தருமாறும் இந்திய ராணுவம் கேட்டுக் கொண்டது. இந்திய நிலப்பகுதிக்குள் நுழைந்து சீனா இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக கூறப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாகவும் மத்திய அரசு மீது விமர்சனங்களை எழுப்பிவிட்டது.

அருணாச்சச்ல பிரதேசமும் சீனாவும்
அருணாச்சலப் பிரதேசத்தை ஏற்கனவே தங்களது நாட்டின் ஒரு பகுதி என்கிறது சீனா. அருணாச்சல பிரதேசத்தின் அதிகாப்பூர்வ பெயர்களை சீனா திடீரென மாற்றியிருந்தது. திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் இதனை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்பதில் நமது அரசு திட்டவட்டமாக உள்ளது.

கண்டுபிடித்த சீனா
இந்நிலையில் காணாமல் போன இளைஞரை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தேஸ்பூர் ராணுவ அதிகாரி ஹர்ஷ்வர்தன் பாண்டே கூறுகையில், சீன ராணுவம் நம்மை தொடர்பு கொண்டு காணாமல் போனதாக கூறப்படும் இளைஞரை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது. உரிய நடைமுறைகளின் படி இந்தியாவின் அந்த இளைஞரை ஒப்படைக்க உள்ளதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications