மிசோரம் சட்டசபை தேர்தல்- முன்னாள் சபாநாயகர்தான் பணக்கார வேட்பாளர்
ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே முன்னாள் சபாநாயகரான லாலாவியாதான் பணக்கார வேட்பாளர் என்று தெரியவந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு வரும் 25-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜோரம் தேசியவாத கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் லாலாவியாதான் பணக்காரர். அதாவது அவரது சொத்து மதிப்பு ரூ69 கோடி.
ரூ10 ஆயிரம்
மிசோரம் மாநில பாஜக வேட்பாளரான பியக்மாவியாவின் சொத்து மதிப்பு ரூ10ஆயிரமாம். அவர் ஐஸ்வால் வடக்கு -3 தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல்வருக்கு ரூ 9 கோடி
மாநில முதல்வரான லால் தன்ஹவ்லாவின் சொத்து மதிப்பு ரூ 9.15கோடி
முன்னாள் முதல்வருக்கு ரூ2.16 கோடி
முன்னாள் முதல்வரான ஜோரம்தங்காவின் சொத்து மதிப்பு ரூ 2.16 கோடியாம்.
நாளை கடைசி நாள்
இம்மாநிலத்தில் வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை கடைசிநாளாகும்.