Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகாலாந்து தனிநாடு கோரும் மூய்வா அமைப்புடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாகாலிம் என்ற பெயரில் அகன்ற நாகாலாந்து தனிநாடு கோரி போராடி வரும் இசாக்- மூய்வா தலைமையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. டெல்லியில் பிரதமர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

தனிநாடு கேட்டு நாகலாந்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிய குழுக்கள் போராடி வருகின்றன. இதனால் கிளர்ச்சி குழுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

naga

இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு அவ்வப்போது கிளர்ச்சி அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இதேபோல் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இசாக்-மூய்வா தலைமையிலான தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த உடன்படிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தம் நிறைவேற உதவியவர்களுக்கு நன்றி. 60 ஆண்டு கால அரசியல் பிரச்சினைக்கு ஒப்பந்தம் மூலம் தீர்வு ஏற்பட்டுள்ளது.

nagalim

நாகலாந்தில் அமைதி நிலவ இந்த ஒப்பந்தம் உதவும். நாகலாந்தில் அரசியல் ரீதியாக சண்டை காரணமாக ஏராளமானோர் இறந்துள்ளனர். எதிர்பாரத விதமாக நாகலாந்து பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதற்கு காரணம் பிரிட்டிஷ் ஆட்சி. நான் பொறுப்பெற்ற பிறகு தனிக்கவனம் செலுத்தி இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.

பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், ராணுவ தளபதி பிக்ராம் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+