நாகாலாந்து தனிநாடு கோரும் மூய்வா அமைப்புடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கை
டெல்லி: நாகாலிம் என்ற பெயரில் அகன்ற நாகாலாந்து தனிநாடு கோரி போராடி வரும் இசாக்- மூய்வா தலைமையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. டெல்லியில் பிரதமர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தனிநாடு கேட்டு நாகலாந்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிய குழுக்கள் போராடி வருகின்றன. இதனால் கிளர்ச்சி குழுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு அவ்வப்போது கிளர்ச்சி அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இதேபோல் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இசாக்-மூய்வா தலைமையிலான தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த உடன்படிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தம் நிறைவேற உதவியவர்களுக்கு நன்றி. 60 ஆண்டு கால அரசியல் பிரச்சினைக்கு ஒப்பந்தம் மூலம் தீர்வு ஏற்பட்டுள்ளது.

நாகலாந்தில் அமைதி நிலவ இந்த ஒப்பந்தம் உதவும். நாகலாந்தில் அரசியல் ரீதியாக சண்டை காரணமாக ஏராளமானோர் இறந்துள்ளனர். எதிர்பாரத விதமாக நாகலாந்து பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதற்கு காரணம் பிரிட்டிஷ் ஆட்சி. நான் பொறுப்பெற்ற பிறகு தனிக்கவனம் செலுத்தி இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.
Today, we mark not merely the end of a problem but the beginning of a new future. #Nagaland http://t.co/23SUObuL4T pic.twitter.com/35x4ih8qQN
— Narendra Modi (@narendramodi) August 3, 2015 பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், ராணுவ தளபதி பிக்ராம் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications