தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை... மவுனம் கலைத்த பிரதமர் மோடி உருக்கம்
லக்னோ: ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது தேசத்துக்கு மிகப் பெரிய இழப்பு என்று பிரதமர் மோடி கண்கலங்கியபடி உருக்கமாக கூறியுள்ளார்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த தற்கொலைக்கு காரணமே மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரே, ஸ்மிருதி இரானிதான் என குற்றம் சாட்டி அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். தற்போது உத்தரபிரதேசத்தின் லக்னோவில் அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் ரோகித் வெமுலா தற்கொலை குறித்து குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் பேசுகையில், எனது நாட்டின் இளைஞர் ரோகித் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தது, மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அமைந்தது. அவரது குடும்பத்தினர் கண்டிப்பாக ஒரு கடினமான நிலையில் இருந்திருப்பார்கள்'
பாரத மாதா, தன் மகனை இழந்து இருக்கிறார். அதற்கு காரணங்கள் இருக்கலாம். அதில் அரசியல் இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு தாய், தன் மகனை இழந்து தவிக்கிறார் என்பதுதான். நான் அந்த வலியை நன்றாக உணர்கிறேன். ஒரு தாய், தன் மகனை இழக்கிறபோது ஏற்படுகிற துயரத்தை விட பெரிதாக எந்த துயரமும் இருக்காது என்றார் உருக்கமாக.
அப்போது பிரதமர் மோடியின் கண்கள் கலங்கின. பின்னர் அம்பேத்கரைப் போல அவமானங்களை எதிர்கொண்டு முன்னேறவும் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications