பெண்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு டெல்லியில் பேரணி.. கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணிவகுப்பு
பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி ராஜ்ய சபா எம்பி கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் டெல்லியில் இன்று பேரணி நடத்தினார்கள்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை உடனயாக கொண்டு வர வேண்டும் என்று ராஜ்ய சபா எம்பி கனிமொழி கோரியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழி வகை செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப் பட்டது. இச்சட்டத்தின்படி பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. இதே போன்று நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களின் பங்கு இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடிய காலமாக இந்திய அரசியல் சூழலில் எழுப்பப்பட்டு வருகிறது.

காத்திருப்பு..
பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வருவதை தொடக்கத்தில் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் 2010ம் ஆண்டு இந்த சட்டம் ராஜ்ய சபாவில் நிறைவேறியதே தவிர, லோக் சபாவில் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் இடஒதுக்கீட்டிற்காக பெண்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக மகளிரணி பேரணி
இந்நிலையில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக மகளிரணி சார்பில் டெல்லியில் இன்று பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு திமுக மகளிர் அணி செயலாளரும், ராஜ்ய சபா எம்பியுமான கனிமொழி தலைமை தாங்கினார்.

கொடி ஏந்தி கோஷம்
இந்தப் பேரணியில் பங்கேற்ற திமுகவைச் சேர்ந்த பெண்கள் திமுக கொடியை கையில் ஏந்தி பெண்களுக்கு தாமதமின்றி 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்தப் பேரணிக்கு டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தள்ளிப் போடக் கூடாது..
பேரணியின் போது கனிமொழி எம்பி, பெண்கள் இட ஒதுக்கிடு மசோதா ஒவ்வொரு காலக் கட்டத்திலும் திட்டமிட்டு தள்ளி போடப்பட்டு வருகிறது. இப்போது இந்த மசோதாவை நிறைவேற்ற நல்ல சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, உடனடியாக இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

காலம் கனிந்து…
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று எதிர்த்த கட்சிகள் இப்போது பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உள்ளன. பெண்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர பலரும் விரும்பும் நிலையில் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கனிமொழி கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications