லஞ்சம் கொடுத்து இரட்டை இலையை வாங்க முயற்சித்த தினகரனை கைது செய்ய வேண்டும்… சசிகலா புஷ்பா ஆவேசம்
லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை வாங்க முயற்சி செய்த டிடிவி தினகரனை கைது செய்ய வேண்டும் என்று ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா ஆவேசமாக கூறியுள்ளது.
டெல்லி: தலைமை இல்லாமல் அதிமுக தொண்டர்கள் தவிக்கின்றனர் என ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார். லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை வாங்க முயற்சி செய்த டிடிவி தினகரனை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பன்னர் அதிமுகவில் களேபரத்திற்கு பஞ்சமே இல்லை. ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை அள்ளி வீசி வந்தனர்.
இந்நிலையில், திடீரென இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுக்கள் எழுத்தன. இதனை மறுத்தும், ஆதரித்தும் இரு அணிகளும் பேசி வருகின்றன.

அதிமுகவின் தலைமை
இதனை ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா கடுமையான சாடினார். இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுக தொண்டர்கள் தலைமை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு நல்ல தலைமை தற்போது தேவைப்படுகிறது.

தினகரன் கைது
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்காக சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்தக் குற்றாச்சாட்டின் பேரில் அவர் உடனே கைது செய்யப்பட வேண்டும்.

துரோகம்
ஓபிஎஸ், சசிகலா குடும்பத்துடன் மீண்டும் இணைவது குறித்து பேசியிருப்பது உச்சகட்ட துரோகம். இதனை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது மட்டும் சசிகலா நடராஜன் குடும்பத்தின் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் மறைந்து போய்விட்டதா? அதே போன்று சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட போது அதனை ஆதரித்தவர் ஓபிஎஸ்.

ஊழல்
இந்த ஆட்சியில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவருமே ஊழல்வாதிகள். வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தி குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜயபாஸ்கரை பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications