பேரலை தாக்குதலில் சிக்கிய மும்பை.. புரட்டி எடுக்கிறது வரலாறு காணாத மழை
மும்பையை இன்று மாலை சுனாமி போன்ற பேரலை தாக்கப் போகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதிப்பை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மும்பை: மும்பையில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எதிர்பார்த்தது போல பேரலைத் தாக்குதல் ஏற்பட்டிருப்பதால் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது.
மும்பையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையின் சில பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

2 அடி தண்ணீர்
சாலைகளில் ஆங்காங்கே 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள 7 ஏரிகளும் 100 சதவீதம் நீரில் நிரம்பியுள்ளன. மும்பை அருகே ரயில் ஒன்று தடம்புரண்டதால் மற்ற ரயில்கள் தாமதமாக காரணமாகிவிட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை
ரயில் சேவைகள் இயக்க சிரமமான நிலையில் ரயில்களின் வருகையும், புறப்பாடும் தாமதமாகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சுனாமி போன்ற அலை
இந்நிலையில் இன்று மாலை மும்பையை சுனாமி போன்ற அளவுக்கு பேரலை தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தற்போது பெரும் பெரும் அலைகள் மும்பை கடலை கொந்தளிக்க வைத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று மாலையில் அதிகபட்சமாக 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது. அதாவது 10 அடிக்கும் மேல் அதன் எழுச்சி காணப்பட்டது. பாதிப்பை கட்டுப்படுத்த, பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தாதர், குர்லா மற்றும் பரேல் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

வெள்ளக் காடானாது
கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுனாமி போன்ற அலை தாக்கலாம் என்ற தகவலால் மக்கள் கலங்கி உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications