விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மும்பை கிங் சர்க்கிள் விநாயகர் சிலை ரூ. 259 கோடிக்குக் காப்பீடு
மும்பை: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜி.எஸ்.பி. சேவா மண்டல் என்ற அமைப்பின் சார்பிக் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை ரூ. 259 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் தமிழகம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. ஆனால், மும்பையில் விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்காக மிகப்பெரிய அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், ஜி.எஸ்.பி., சேவா மண்டல் என்ற அமைப்பின் சார்பில் கிங் சர்க்கிள் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தங்க ஆபரணங்கள்...
ஜி.எஸ்.பி. சேவா மண்டல் அமைப்பின் சார்பில் மும்பை கிங் சர்க்கிள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைக்கு, 22 கோடி ரூபாய் மதிப்பில், 80கி தங்க, வைர ஆபரணங்கள் சாத்தப்பட்டுள்ளன.

லாக்கர்...
அந்த விநாயகரை கடலில் கரைக்கும் முன், அதில் உள்ள ஆபரணங்கள் அகற்றப்பட்டு, பாதுகாப்பாக லாக்கரில் வைக்கப்படும்.

பாதுகாப்பு...
விநாயகர் சதுர்த்தி பூஜை துவங்கிய நாள் முதல், சிலை கரைப்பு நடைபெறும் நாள் வரை, இந்த விநாயகர் சிலைக்கு, இயந்திர துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவர்.

காப்பீடு...
இந்த சிலை மற்றும் பக்தர்கள், மண்டபம் போன்ற அனைத்து விதமான பாதுகாப்புக்கும் சேர்த்து, 259 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தீ, வெள்ளம், பயங்கரவாதிகள் தாக்குதல், இயற்கை சீற்றம் போன்ற ஆபத்துகளை குறிப்பிட்டு, இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு...
மண்டல் மற்றும் மண்டல் பராமரிப்புக்கான தன்னார்வ தொண்டர்கள் சார்பில் நாள் ஒன்றுக்கு ரூ.51 கோடியே 70 லட்சம் என்ற அளவில் இதுவரை 5 நாட்களுக்கு காப்பீடு செய்து உள்ளனர். இதன்படி, இந்த விநாயகர் சிலைக்கு ஏதேனும் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், காப்பீடு செய்துள்ள நிறுவனம், 259 கோடி ரூபாயை, ஜி.எஸ்.பி., சேவா மண்டலுக்கு வழங்கும்.

கடந்தாண்டு...
கடந்த ஆண்டு விநாயகர் சிலை ரூ.223 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது. கிங்சர்க்கிள் கணபதி சிலை 5 நாட்கள் மட்டும் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்தப்பட்டு அதன் பின் கடலில் கரைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications