சோனியா குடும்பம் பற்றி கூடுதல் தகவல்களுடன்... அடுத்த புத்தகம் எழுதுகிறார் நட்வர் சிங்!
டெல்லி: ஒரு வாழ்க்கைப் போதாது என்ற தன் சுயசரிதை நூலால் பரபரப்பைக் கிளப்பிய வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் நட்வர் சிங், தற்போது அடுத்த புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார். முந்தையப் புத்தகத்தை விட தனது புதிய புத்தகத்தில் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றிக் கூடுதல் தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளது, அப்புத்தகம் மீதான எதிர்பார்ப்பை தற்போதே எகிற வைத்துள்ளது.
காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்பட்டவர் 83 வயது நட்வர் சிங். இவர் கடந்த 2008-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார். இவர், ‘ஒரு வாழ்க்கை போதாது' என்ற தலைப்பில் தனது சுய சரிதையை நூலாக எழுதி வெளியிட்டார்.
அந்தப் புத்தகத்தில் 2004ம் ஆண்டு சோனியா பிரதமராவதை ராகுல் தடுத்தார் என்ற பரபரப்பான குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். மேலும், ராஜீவ் படுகொலை குறித்தும் பல பரபரப்பான தகவல்களை அவர் வெளியிட்டிருந்தார்.

கண்டனம்...
நட்வர்சிங்கின் கருத்துக்களுக்கு காங்கிரஸ் தனது கண்டனத்தை தெரிவித்தது. தானும் சுயசரிதை எழுதப் போவதாகவும், அதில் உண்மைகளை மட்டும் கூறப்போவதாகவும் சோனியா பதிலடி கொடுத்தார்.

இரண்டாம் பாகம்...
இந்தப் பரபரப்புகளே இன்னும் அடங்காத நிலையில், தனது சுயசரிதையிம் இரண்டாம் பாகம் எழுதப் போவதாக தெரிவித்துள்ளார் நட்வர் சிங்.

மை இர்ரெகுலர் டைரி...
இது குறித்து பி.டி.ஐ.க்கு நேற்று அவர் அளித்த பேட்டியில், "நான் புதிதாக எழுதவுள்ள புத்தகத்துக்கு "மை இர்ரெகுலர் டைரி' என்று பெயரிட்டுள்ளேன். இப்புத்தகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.

கூடுதல் தகவல்கள்...
மேலும், அந்தப் புத்தகத்தில் சோனியா காந்தியின் குடும்பத்தைப் பற்றியும், அவரது தலைமையின் கீழ் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்தும் மேலும் தகவல்கள் இருக்குமா? என்ற கேள்விக்கு, "அந்தப் புத்தகம் இன்னமும் அதிகமான தகவல்களைப் வெளிப்படுத்தும்' என்று நட்வர் சிங் பதிலளித்தார்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications