நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு.. பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தினர்.
நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் தேர்வு தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த 88,000 பேர் எழுதினர்.

இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவு எட்டாக்கனியாகிவிடும் என்பதால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே பல்வேறு வழக்குகளுக்கு மத்தியில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த தேர்வு முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் வடமாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கான கேள்வித் தாளும், தமிழகத்தில் கேட்கப்பட்ட கேள்வித்தாளும் வேறு மாதிரியாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தங்கள் ரத்தத்தில் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
தமிழக அமைச்சர்களும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தினர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications