ஜனாதிபதி தேர்தல்... ராம்நாத் கோவிந்துக்கு எதிராக டாக்டர் அம்பேத்கரின் பேரன்- எதிர்க்கட்சிகள் வியூகம்
ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எதிராக டாக்டர் அம்பேத்கரின் பேரனாகிய பிரகாஷ் அம்பேத்கர் நிறுத்தப்படுவார் என தெரிகிறது.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட்டுள்ள ராம்நாத் கோவிந்தை எதிர்த்து டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரை எதிர்க்கட்சிகள் நிறுத்தக் கூடும் என்று தெரிகிறது.
ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து வரும் ஜூலை 17-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பாஜக ஆட்சி மன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக வேட்பாளர் தேர்வு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் தேர்வு
இதைத் தொடர்ந்து பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று அமித் ஷா அறிவித்தார். அவர் தலித் சமூகத்தினரை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஆர்எஸ்எஸ் சிந்தனையாளராக உள்ளதால் அவரை ஆதரிக்க ஒருமித்த கருத்து ஏற்படாது என்று தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் முடிவு
பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை எதிர்த்து தலித் வேட்பாளர் ஒருவரையே களமிறக்க எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். அதன்படி டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அல்லது முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் பிரகாஷ் அம்பேத்கரே பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளார்.

நிதீஷ்குமாரின் நிலைப்பாடு
பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தின் பெயர் தேர்வு செய்யப்பட்டத்தை தொடர்ந்து நிதீஷ்குமாரும், நவீன் பட்நாயக்கும் ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஒருவேளை இவர்கள் இருவரும் கோவிந்துக்கு ஆதரவளிக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடிதான்.

சிவசேனையின் முடிவு
பாஜக நிறுத்திய வேட்பாளரை ஆதரிப்பது குறித்து இதுவரை சிவசேனை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரகாஷ் அம்பேத்கரை வேட்பாளராக நிறுத்தினால் சிவசேனையின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை எதிர்க்கட்சிகள் உற்று நோக்கி வருகின்றன.

பிரகாஷ் அம்பேத்கர்?
கடந்த 1954-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி பிறந்தவர் பிரகாஷ். இவர் அம்பேத்கரின் பேரன். மகாராஷ்டிரத்தில் உள்ள பரிபுர பகுஜன் மகாசங்கம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார். அகோலா லோக்சபா தொகுதியின் உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது இளைய சகோதரர் ஆனந்தராஜ் அம்பேத்கரும் அரசியல்வாதி ஆவார்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications