லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியா? மாயாவதி விளக்கம்
லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து மாயாவதி விளக்கம் தந்திருக்கிறார்.
லக்னோ: லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 11-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என கோரக்பூர் பொறுப்பாளர் அறிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. இது தொடர்பான செய்திகள் வதந்தி.
We have not floated any candidate for Lok Sabha Phulpur & Gorakhpur by-polls. Our party members will exercise their vote to defeat BJP candidate: Mayawati, BSP chief in Lucknow pic.twitter.com/FubsWfsyXF
— ANI UP (@ANINewsUP) March 4, 2018
கோரக்பூர், புல்பூர் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இரு தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம்.
லோக்சபா இடைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரை ஆதரிப்போம். ராஜ்யசபா இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளரை சமாஜ்வாடி ஆதரிக்கும்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.