தெலுங்கானா உருவானால் காங்கிரஸ் அழியும்: ஆந்திர முதல்வர் கிரண்குமார் எச்சரிக்கை!

தெலுங்கானா குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கிரண்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தெலுங்கானா அமைப்பதால் ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சரி செய்ய முடியாத பின்னடைவு ஏற்படும். ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பதினால் ஏற்படும் பிரச்னைகளை பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் புரிந்து கொள்ளவில்லை.
ஆந்திராவை பிரிக்க காங்கிரஸ் கட்சியின் தீவிரமான தொண்டர்களாகிய நாங்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறோம் என்று அவர்கள் உணரவில்லை. மாநில சட்டசபையில் நிராகரித்த பின்னரும் தெலுங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கோருவது துரதிருஷ்டவசமானது.
ஆந்திரா இரண்டாகப் பிரிப்பதைத் தடுக்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது உள்ளிட்ட எந்த தியாகத்தையும் செய்வேன். தனிப்பட்ட நபரை விட கட்சி பெரியது; ஆனால், கட்சியை விட மக்களின் நலனே முக்கியம்.
ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்தால் இரு பகுதி மக்களும் மின்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கடும் பாதிப்பைச் சந்திப்பர். அதனாலேயே எதிர்க்கிறோம்.
ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி தனிக் கட்சி தொடங்குது பற்றி முடிவெடுப்போம்.
இவ்வாறு கிரண்குமார் ரெட்டி கூறினார்.
-
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே!












Click it and Unblock the Notifications