உஷார் மக்களே.. பொருளாதார சீர்திருத்தம் தொடரப்போகுதாம்.. அருண் ஜெட்லி பேச்சால் பரபரப்பு
மும்பை: பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில், பொருளாதார பத்திரிகையொன்று நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜெட்லி பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஜெட்லி பேசியதாவது:
பொருளாதார சீர்திருத்த பாதையில் அரசு தொடர்ந்து பயணிக்க உள்ளது. நாம், அடிப்படை கட்டமைப்பை மாற்ற இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது.

என்ட் கார்டே கிடையாது
சில நேரங்களில் சீர்திருத்தங்களின் வேகம் குறைவாக இருக்கலாம். ஆனால் நமது பாதை தெளிவானது. இதில் முடிவு என்பது கிடையாது. இது ஒரு பயணம். ஜிஎஸ்டியால் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

வங்கி அமைப்பு
ஒரு கட்டத்தில் நமது வங்கிகள் மிக அதிக அளவுக்கு கடன்களை வழங்கியபடி இருந்தன. 2015ம் ஆண்டு வாக்கில்தான், வாராக்கடன்கள் அவர்களுக்கு அச்சுறுத்துவதாக மாறியது. நமது வங்கி அமைப்பு வெளிப்படையாக இருந்தால்தான் பொருளாதாரத்தில் வலிமையாக இருக்க முடியும்.

பொருளாதார பலம்
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வங்கிகளின் ஊக்கத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது போன்ற தைரியமான முடிவுகள் இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுவாக்கும். எனவே இந்த விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள்
சுனாமியைவிட, பண மதிப்பிழப்பு மோசமானது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் யஷ்வந்த் சின்ஹாவும் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருந்தார். ஆனால் பொருளாதார சீர் திருத்தம் தொடரும் என்று ஜெட்லி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications