ஆளுநர் விவகாரம்.. கடிதம் அனுப்புவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.. சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன்!
புதுச்சேரி: ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுகவினர் குடியரசுத் தலைவரிடம் கடிதம் அளிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் - மாநிக அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதேபோல் தமிழ்நாட்டில் திமுக - ஆளுநர் ஆர்என் ரவி இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சனாதனம், திராவிடம், திருக்குறள், திருவள்ளுவர், கலாச்சாரம், தமிழ், பண்பாடு, இந்திய வரலாறு என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி பேசி வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

திமுக முடிவு
இதனால் ஆளுநர் ஆர்என் ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டன. அதுமட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களையும் ஆளுநர் ஆர்என் ரவி வேண்டுமென்றே கிடப்பதில் போட்டுள்ளதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்தது.

எம்பி-க்கள் ஆதரவு
இதற்காக ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணியில் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயம் வந்து ஆளுநரை திரும்பப் பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட்டனர். இதனை திமுக நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் வழங்க உள்ளது.

தமிழிசை செளந்தரராஜன் கருத்து
இதுகுறித்து புதுச்சேரி துணை நிலைஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஆளுநருக்கு கருத்து கூறுவதற்கு உரிமை உள்ளது. ஆளுநரின் கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க் கருத்து சொல்லலாம். ஆனால் கருத்து சொல்லிவிட்டார் என்பதற்காகவே திரும்பப்பெற முறையிடுவது சரியல்ல என்பதே என் கருத்து.

எதுவும் நடக்கப்போவதில்லை
ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் முதல் முதல் குடிமகன் வரை அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதனால் ஆளுநர் ஆர்என் ரவி அவரது கருத்தை சொல்லுகிறார். ஆனால் கருத்து சொல்லுகிறார் என்பதற்காகவே அவரை திரும்பப்பெற வேண்டும் என்பது தேவையில்லாதது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுப்பதால், எதுவும் நடக்கப்போவதில்லை. நாங்களும் நடத்துவோம் என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தேவையற்றது என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications