உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும்: பிரமோஸ் இயக்குநர் மிஸ்ரா
பெங்களூர்: உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும் என்று பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் சுதிர் குமார் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா இணைய தளத்துக்கு சுதிர்குமார் மிஸ்ரா அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மிக அதிவேக ஏவுகணை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அடுத்த 7 முதல் 12 ஆண்டுகளில் மிக அதிவேக ஏவுகணையை உருவாக்கிய முதல் நாடு என்ற பெருமையை நாம் பெறுவோம்.

இதில் நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையை 'ஹைப்பர்சோனிக்' மிக அதிவேக ஏவுகணையாக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சுகோய் போர் விமானத்தில் பிரமோஸ் ஏவுகணையைப் பொருத்தும் பணியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறைவு செய்துள்ளது. அடுத்த சுகோய் விமானத்திலும் மற்றொரு ஏவுகணை பொருத்தப்பட உள்ளது.
சுகோய் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை ஏவும் சோதனை அடுத்த 2 மாதத்தில் நடைபெறக் கூடும். சூப்பர்சோனிக் பிரமோஸ் வகையில் அடுத்த தலைமுறை ஏவுகணைக்கு பிரமோஸ்- என்ஜி பெயரிடப்பட உள்ளது.
இந்த செயல்திட்டத்தை நோக்கி நாம் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். நிச்சயம் பிரமோஸ்- என்ஜி ஒருநாள் நனவாகும். எதிர்காலத்தில் இத்தகைய பிரமோஸ்- என்ஜி ஏவுகணைகள் ஐந்தை ஒரு சுகோய் போர் விமானத்தில் பொருத்தக் கூடியதாக இருக்கும்.

பிரமோஸ் ஏவுகணையின் அடுத்த கட்ட விரிவாக்கத்துக்காக ராஜஸ்தானிலும் ஒரு நிறுவனம் அமைக்கப்பட இருக்கிறது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு பிரமோஸ் ஏரோஸ்பேஸ் இயங்கினாலும் ஹைதராபாத், நாக்பூரில் துணை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவின் திருவனந்தபுரத்தில் 3வது துணை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ.வும் ரஷ்யாவின் என்.பி.ஓ.எம். நிறுவனமும் இணைந்து உலகத்தின் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கியிருக்கிறோம். இருநாட்டு மக்களின் நல்லுறவின் வெற்றியாக பிரமோஸ் ஏவுகணை அமைந்துள்ளது.
இவ்வாறு சுதிர்குமார் மிஸ்ரா கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications