நல்லுறவு நடவடிக்கை... 88 பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!
டெல்லி: நல்லுறவு நடவடிக்கையாக இந்தியாவின் அரேபிய கடற்பரப்பு எல்லையில் அனுமதியின்றி மீன்பிடித்ததாக கைது செய்யப் பட்ட 88 பாகிஸ்தான் மீனவர்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இந்தியாவின் அரேபிய கடற்பரப்பு எல்லையில் அனுமதியின்றி மீன்பிடித்ததாக 88 பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு, பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், எல்லைதாண்டி கடற்பகுதியில் மீன்பிடித்துகைதான 88 மீனவர்களை விடுதலை செய்வதாக அப்போது மோடி உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து, கடல் மார்க்கமாக பிடிபட்ட 88 மீனவர்களையும் நட்புறவு நடவடிக்கையாக மத்திய அரசு நேற்று விடுதலை செய்தது. விடுவிக்கப் பட்ட 88 மீனவர்களில் 6 பேர் மைனர்கள் ஆவர். அடாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்திருந்தது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் லாகூரிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications