பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன்ஜாதவ் விடுதலையாவதில் புதிய சிக்கல்-இந்தியாவுக்குப் பின்னடைவு
இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியா மிக விரைவாக பதில் அளிக்கும்படி சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதிய கால அவகாசம் வழங்கப்படாததால் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ப
டெல்லி: குல்பூஷன் யாதவ் விவகாரத்தில், இந்தியா பதில் அளிக்க, பன்னாட்டு நீதிமன்றம் போதிய அவகாசம் வழங்காததால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் யாதவ், ஈரானுக்கு தொழில் பயணமாகச் சென்றபோது, அவரை உளவாளி எனக் கூறி, பாகிஸ்தான் உளவு அமைப்பினர் கைது செய்தனர். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, குல்பூஷனுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை நேரில் சந்தித்துப் பேச இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் உளவாளிகளை விடுதலை செய்தால்தான், குல்பூஷனை சந்திக்க, இந்திய வெளியுறவு அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அந்நாடு கூறியது.

விசாரணை
இதை எதிர்த்து, பன்னாட்டு நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதில், நீதிமன்ற விசாரணை முடிவடையாமல், குல்பூஷன் யாதவுக்கு, மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும்படி, உத்தரவிடப்பட்டது.

கால அவகாசம்
மேலும், இந்தியாவின் வாதங்களை பதிவு செய்ய 6 மாதம் அவகாசம் கோரப்பட்டது. அதனை நிராகரித்த பன்னாட்டு நீதிமன்றம், செப்டம்பர் 13ம் தேதிக்குள் இந்தியா, தனது விளக்கத்தை பதிவு செய்யும்படி கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு, டிசம்பர் 13ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

நெருக்கடி
இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னடைவு
இந்தியாவுக்கு சிறு தோல்வி கிடைத்தாலும் போதும் என்கிற நிலைப்பாட்டில் பாகிஸ்தான் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் என்ன இறுதி தீர்ப்பு கிடைக்கப் போகிறது என குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications