பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ. 16-ம் தேதி ஆரம்பம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 3-வது அல்லது 4-வது வாரத்தில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 13-ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது, நவம்பர் 16-ந் தேதி கூட்டத்தொடரை தொடங்கி, டிசம்பர் 16-ல் முடிக்க முடிவு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களவை செயலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், '16-வது மக்களவையின் 10-வது அமர்வு நவம்பர் 16-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அரசின் அலுவல்களுக்கு உட்பட்டு இந்த அமர்வு டிசம்பர் 16-ந் தேதி நிறைவு பெற வாய்ப்பு உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. இதைப்போன்ற ஒரு அறிவிப்பை மாநிலங்களவை செயலாளரும் வெளியிட்டு உள்ளார்.
ஒரு மாதம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் யூரி ராணுவ முகாம் தாக்குதல், ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொண்ட 'சர்ஜிக்கல்' நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடம்பெறும் என தெரிகிறது. மேலும் மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. தொடர்பான மசோதாக்கள் உள்பட பல மசோதாக்களை இந்த தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications