சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகார் விவகாரத்தில் விலகி நிற்க மத்திய அரசு முடிவு!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சக நீதிபதிகள் போர்கொடி தூக்கியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தள்ளியே நிற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சக நீதிபதிகள் போர்கொடி தூக்கியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தள்ளியே நிற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றம்சாட்டியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை உடனடியாக போனில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகார் விவகாரத்தில் விலகி நிற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நீதிமன்றமே இப்பிரச்சனையை சரி செய்து கொள்ள வழிவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன், பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications