பாகிஸ்தானுக்கு ஓடச் சொன்ன கிரிராஜ்சிங் தலைமறைவு- முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு!!
பாட்னா: நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போக வேண்டும் என்று சொன்ன பாஜக மூத்த தலைவர் கிரிராஜ்சிங்கை கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டார். மேலும் தமக்கு முன்ஜாமீன் கோரி பாட்னா நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் அவர் பிரதமரானவுடன் பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டும்.. அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் அமைச்சருமான கிரிராஜ்சிங் பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. பாரதிய ஜனதா தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைது செய்யவும் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மேலும் கிரிராஜ்சிங் பிரசாரம் மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கிரிராஜ்சிங்கை கைது செய்ய ஜார்க்கண்ட் மாநில போலீசார் மும்முரமாக தேடி வருகின்றனர். இன்று அவரது வீட்டில் சல்லடை போட்டு போலீசார் தேடினர். அவரது குடும்பத்தினரிடம் கிரிராஜ்சிங்கின் இருப்பிடம் குறித்து துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.
தலைமறைவு
ஆனால் கிரிராஜ்சிங்கின் இருப்பிடம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை. தற்போது தலைமறைவாகிவிட்ட அவரை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்பதில் போலீசார் மும்முரமாக தேடி வருகின்றனர்.
முன்ஜாமீன் கோரி மனு
இதனிடையே கிரிராஜ்சிங் தான் கைது செய்யப்படாமல் பாட்னா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பாட்னா நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ள இருக்கிறது.
-
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications