பாகிஸ்தானுக்கு ஓடச் சொன்ன கிரிராஜ்சிங் தலைமறைவு- முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு!!
பாட்னா: நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போக வேண்டும் என்று சொன்ன பாஜக மூத்த தலைவர் கிரிராஜ்சிங்கை கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டார். மேலும் தமக்கு முன்ஜாமீன் கோரி பாட்னா நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் அவர் பிரதமரானவுடன் பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டும்.. அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் அமைச்சருமான கிரிராஜ்சிங் பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. பாரதிய ஜனதா தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைது செய்யவும் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மேலும் கிரிராஜ்சிங் பிரசாரம் மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கிரிராஜ்சிங்கை கைது செய்ய ஜார்க்கண்ட் மாநில போலீசார் மும்முரமாக தேடி வருகின்றனர். இன்று அவரது வீட்டில் சல்லடை போட்டு போலீசார் தேடினர். அவரது குடும்பத்தினரிடம் கிரிராஜ்சிங்கின் இருப்பிடம் குறித்து துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.
தலைமறைவு
ஆனால் கிரிராஜ்சிங்கின் இருப்பிடம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை. தற்போது தலைமறைவாகிவிட்ட அவரை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்பதில் போலீசார் மும்முரமாக தேடி வருகின்றனர்.
முன்ஜாமீன் கோரி மனு
இதனிடையே கிரிராஜ்சிங் தான் கைது செய்யப்படாமல் பாட்னா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பாட்னா நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ள இருக்கிறது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications