தேசத்தின் பன்முக தன்மையை மதிக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டுள்ளார்.
நாக்பூர்: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டுள்ளார். இதில் இந்தியாவின் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு சென்றார்.

இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போதே இந்த அழைப்பு குறித்து பல சர்ச்சைகள் வந்தது. ஆனால் பிரணாப் செல்வாரா, மாட்டாரா என்று ரகசியம் காக்கப்பட்டது. கடைசியில் அவர் விழாவிற்கு செல்வதாக தெரிவித்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு பிரணாப் விழாவில் கலந்து கொள்ள மஹாராஷ்டிரா வந்திருந்தார். தற்போது, அவர் ஆர்எஸ்எஸ் இயக்க செயல்பாட்டாளர்களுடன் உரையாடினார். அதன்பின் இன்று மாலை ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பாகவதத்தை சந்தித்தார். அதன்பின் இருவரும் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் மரியாதை செலுத்தினார்கள். அதன் பின் நடந்த நிகழ்வில் பிரணாப் தலைமையேற்று பேசினார்.
அதில், நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும்.சிலரை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு பன்முகத்தன்மையை பார்க்க முடியாது.சகிப்புத்தன்மை இல்லாதது தேசியவாதத்தை சீர்குலைக்கும்.
நம் நாட்டில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிருஸ்துவர்கள் சமமாக மதிக்கப்படவேண்டும். நேருவின் கனவு அதுதான். எல்லா மதத்தினருக்கும் சரியாக வாய்ப்பளிக்க வேண்டும். நேரு இதற்காக உழைத்தார்.
தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவை. எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டும். மத கலவரங்களை நிறுத்த வேண்டும் . இந்திய தேசிய மக்களை சிதைக்கு வகையில் தீவிரமாக இருக்காது என்று அண்ணல் காந்தி கூறியுள்ளார். நாம் அப்படித்தான் நடக்க வேண்டும் . மதங்களையும். மொழிகளையும் வைத்து மக்களை பிரிக்க கூடாது.
இந்தியா முழுக்க மக்கள் வேறு வேறு மொழிகள் பேசுகிறார்கள். பல மக்கள் பல மொழிகளை பேசுகிறார்கள். எல்லா மொழிகளையும் அரசு மதிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications