ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு! ரூட்டை மாற்றி பேசிய மம்தா! என்னாச்சி?
கொல்கத்தா: ‛‛மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் மாற்றத்துக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடி வகுப்பை சேர்ந்த ஒருவரை நிறுத்துவதாக பாஜக முன்கூட்டியே கூறியிருந்தால் அதுபற்றி எதிர்க்கட்சிகளுடன் விவாதித்து இருக்கலாம்'' என மம்தா பானர்ஜி கூறினார்.
இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவுக்கு வருகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி முடிந்துள்ளது.

யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிறகு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் கால்பதித்தார். பாஜகவில் இணைந்து செயல்பட்டார். பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். பிறகு அவர் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

திரெளபதி முர்மு
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களமிறங்கி உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். இவர் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார். இவர் பாஜகவில் அரசியல் பிரவேசம் செய்து கவுன்சிலர் முதல் மாநில அமைச்சர் வரை பதவி வகித்தார். அதன்பிறகு ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார்.

ஆதரவு கோரும் வேட்பாளர்கள்
ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் இருவரின் மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இருவரும் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். நேற்று தமிழகம் வந்த யஷ்வந்த் சின்ஹா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் ரதயாத்திரையை துவக்கி வைத்த பிறகு மம்தா பானர்ஜி பேசியதாவது: ‛‛தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறிப்பாக மகாராஷ்டிராவில் நடந்த சம்பவத்துக்குபிறகு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

முன்கூட்டியே கூறியிருக்கலாம்
பழங்குடியினர் மீது எங்களுக்கும் நல்ல உணர்வுகள் உள்ளன. பழங்குடி வகுப்பை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த போகிறோம் என பாஜக முன்பே கூறியிருந்தால் அதுபற்றி எதிர்க்கட்சிகளுடன் அமர்ந்து விவாதித்து இருக்கலாம். ஆனால் பாஜக எங்களிடம் பரிந்துரைகளை மட்டுமே கேட்டது.

மக்கள் நலனை அறிந்து..
மக்கள் நலனை அறிந்து செயல்படும் நபர் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தால் அது நாட்டுக்கு நன்றாக இருந்திருக்கும். தற்போது 17 எதிர்க்கட்சிகள் இணைந்து முடிவு செய்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இனி எதுவும் செய்ய முடியாது'' என்றார்.

ஆர்வமாக இருந்த மம்தா பானர்ஜி
எதிர்க்கட்சிகள் சார்பில் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த மம்தா பானர்ஜி தான் அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதினார். இவர் தலைமையில் டெல்லியில் கடந்த மாதம் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற 2வது கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications