பிரியங்கா காந்தி ஒரு காகித புலி: வெற்றி பெருமிதத்தில் ஸ்மிருதி இரானி நக்கல்
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி ஒரு காகித புலி என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல் செய்துள்ளார்
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ள நிலையில் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி ஒரு காகித புலி என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல் செய்துள்ளார்.
மாநில சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் சமாஜவாதி- காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ், பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்ட பாஜக தனித்து போட்டியிட்டு 320-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி வெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பிரியங்கா காந்தியும் அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் சிலர் பிரியங்கா காந்தியிடம் வலியுறுத்தினர்.
எனினும் சமாஜவாதி- காங்கிரஸ் கூட்டணிக்காக பிரியங்கா காந்தியின் பிரசாரம் எந்தவிதத்திலும் எடுபடவில்லை என்பது தற்போது தெரிகிறது. நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா, சொற்ப அளவிலான தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டார்.
அந்த பொதுக் கூட்டங்களிலெல்லாம் மோடியை அவர் விமர்சித்தே பேசியிருந்தார். தற்போது அவர் ஒரு காகித புலி என்பது தெரிகிறது. ஜாதி, மதம், மொழி, இனம் ஆகிய தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது என்றால் அதற்கு பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரின் கடின உழைப்பே காரணம் என்றார் ஸ்மிருதி இரானி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications