ரபேல்: ராபர்ட் வதோராவிற்காக ராகுல் பேரம் பேசினார்.. பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உறவினர் ராபர்ட் வதோராவிற்கு ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உறவினர் ராபர்ட் வதோராவிற்கு ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.
ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
[ தேர்தல்: மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவில் மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தம்! ]
இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயர் சிக்கி இருக்கிறது. இதில் 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என்று பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த குற்றச்சாட்டு உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் விமான ஒப்பந்தத்தை அளிக்கும்படி டஸால்ட் நிறுவனத்தை (ரபேல் விமானத்தை அளிக்கும் நிறுவனம்) பிரதமர் மோடி வற்புறுத்தியதாக கூறியுள்ளது.

பாஜக குற்றச்சாட்டு
இந்த நிலையில்தான் ராகுல் காந்தி தனது உறவினர் ராபர்ட் வதோராவிற்கு இந்த ரபேல் ஒப்பந்தம் கிடைக்க பேச்சுவார்த்தை நடத்தினார் (காங்கிரஸ் ஆட்சியில்) என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதாவது ராபர்ட் வதோராவின் நிறுவனத்திற்கு ரபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை அளிக்க ராகுல் காந்தி முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.

எப்படி
பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் இந்த குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார். சஞ்சய் பந்தாரி என்ற ஆயுத ஒப்பந்த டீலர் மூலம் காங்கிரஸ் டஸால்ட் நிறுவனத்திடம் இந்த ஒப்பந்தத்தை செய்ய இருந்துள்ளனர். இதற்காக இவர்கள் பிரான்ஸ் சென்று இருக்கிறார்கள் என்று கஜேந்திர சிங் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

காங்கிரஸ் மறுப்பு
ஆனால், ஏன் சஞ்சய் பந்தாரி பாஜக ஆட்சியில் மோடியுடன் ரபேல் ஒப்பந்தம் செய்ய பிரான்ஸ் சென்றார் என்று இவர் விளக்கமளிக்கவில்லை. பிரான்ஸுடன் மோடி ஒப்பந்தம் செய்த போது அங்கு சஞ்சய் பந்தாரியும் இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு அவர் விளக்கமளிக்கவில்லை. இந்த நிலையில் காங்கிரசும் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications