ராகிங் கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற அமைச்சர் மகன் - 3 மாணவர்கள் உட்பட 5 பேர் கைது
குவாலியர்: பீகார் மாநில அமைச்சரின் மகன் ராகிங் கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உட்பட ஐந்து பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பர் ஜெய்குமார் சிங். இவரின் 14 வயது மகன் ஆதர்ஷ் சிங் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த, 20ம் தேதி விடுதியில் மயங்கி நிலையில் மீட்கப்பட்ட ஆதர்ஷ் சிகிச்சைக்காக பள்ளி நிர்வாகத்தால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டான். அங்கு சிறுவனது உடல் நிலை மோசமானதை அடுத்து, டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான் ஆதர்ஷ்.
இது தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த அமைச்சர் ஜெய்குமார் சிங் பள்ளி விடுதியில் நிகழ்ந்த 'ராகிங்' கொடுமையே மகனின் இந்த நிலைமைக்கு காரணம் என புகார் தெரிவித்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் தரப்பில் மாணவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.
பிரச்னை பெரிதானதை அடுத்து துணை கலெக்டர் மற்றும் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஆதர்ஷ் சிங்கை சில இழிவான வேலைகளை செய்யும்படி செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள் சிலர் துன்புறுத்தியதும் அதனால் மன உளைச்சல் அடைந்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து ஆதர்ஷை ராகிங் செய்த 3 சீனியர் மாணவர்கள் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி ஊழியர்கள் இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications