காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்ட் தான் ரகுராம் ராஜன்... சு.சுவாமி 'பொளேர்'
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது பல்வேறு செயலாளர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் ரகுராம் ராஜன் மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்தார். இந்நிலையில் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதனிடையே ரகுராம் ராஜனுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக இராண்டாவது முறை வாய்ப்பு வழங்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கினார்.இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் 2-வது முறையாக நீடிக்க விரும்பவில்லை என ரகுராம் ராஜன் தன் பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும், அவருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜகவினர் ரகுராம் ராஜனை குறிவைத்துச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் கட்சியின் ஒரு ஏஜண்டாக ரகுராம் ராஜன் செயல்படுகிறார் என்று விமர்சித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், ரகுராம் ராஜன் வளர்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், அரசியல்வாதி போன்று செயல்பட்டதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் உண்மையான அக்கறை செலுத்தவில்லை என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும், ரிசர்வ் பேங்க் ஆளுநராக இரண்டாவது முறையாக ரகுராம் ராஜனை நியமிக்கக்கூடாது. அவருக்கு அந்த தகுதி இல்லை. ரகுராம் ராஜன் பெயரளவுக்குதான் இந்தியர்; மனதளவில் அவர் ஓர் அமெரிக்கர். இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார் என குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications