காங்கிரசுக்கு 2ஜி, பாஜகவுக்கு ஜிஎஸ்டி.. தலைவர்கள் பரபர வார்த்தை போர்
ஜி.எஸ்.டி வரியை சில நாட்களுக்கு முன்பு கப்பார் சிங் வரி என்று ராகுல் விமர்சித்து இருந்தார்.
டெல்லி : காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளின் இடையே மீண்டும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ராகுலைக் கொண்டு காங்கிரஸ் மீண்டும் பழைய எழுச்சியைப் பெற முயற்சித்து வருகிறது. இது பா.ஜ.க.,விற்கு தலைவலியாகி உள்ளது.
சமீபத்தில், குஜராத் மக்களிடையே ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பா.ஜ.க கொண்டுவந்திருக்கும் ஜி.எஸ்.டி வரியானது கப்பார் சிங் (கொள்ளையன்) வரி என்று அர்த்தப்படுத்தினார். மேலும் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லி மக்களின் கையில் பணம் இல்லாத நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள் என்றும் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், 'ராகுலுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நாங்கள் மக்களின் நன்மைக்காக ஜி.எஸ்.டி கொண்டு வந்தோம். ஆனால், காங்கிரஸ் 2ஜி ஊழலையும், நிலக்கரி ஊழலையும் யார் நன்மைக்காக செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?' என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
மேலும், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக நவம்பர் 8ம் தேதி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு போராட்டம் தான். காரணம் டிஜிட்டல் இந்தியாவாகிவிட்டால் அவர்களால் முன்னைப் போல செயல்பட முடியாது அல்லவா? உண்மையில் இதை மக்கள் கொண்டாட வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.

மக்கள் வரவேற்கிறார்கள்
‘ஜி.எஸ்.டி மூலம் நாடு முழுவதும் ஒரே வரி என்கிற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறது பா.ஜ.க. இதனால் நாடு முழுவதும் ஒரு பொதுச்சந்தை உருவாகி இருக்கிறது. முதலில் மக்கள் கொஞ்சம் சிரமப்பட்டாலும் தற்போது அதற்கு பழகிவிட்டார்கள்' என்றும் அவர் கூறி இருக்கிறார்.

ஜி.எஸ்.டி என்ன செய்தது ?
ஆனால், உண்மையில் ஜி.எஸ்.டி.,யால் மக்கள் அதிக அளவில் பாதித்து இருக்கிறார்கள். இன்னும் பொருளாதார மந்தநிலை சீராகவில்லை. பல சிறுகுறு வியாபாரிகள் தொழில் நஷ்டமடைந்து இருப்பதாக ஆதாரங்களோடு காங்கிரஸ் தெரிவிக்கிறது.

மீண்டு வருகிறது காங்கிரஸ்
ராகுல் காந்தியை தலைவராக அறிவிப்பதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாகவே குஜராத் தேர்தலை சொல்கிறார்கள். ராகுலின் நடவடிக்கைகளிலும் நிறைய மாற்றம் தெரிகின்றது. பா.ஜ.க இதை புதிய தலைவலியாக உணர்கிறது.

சிக்கலில் பா.ஜ.க
எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை நவம்பர் மூன்றாம் வாரத்தில் நடைபெற இருக்கிற பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கும். அப்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறது பா.ஜ.க மேலிடம்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications