விடுமுறையை கழிக்க மட்டுமே இந்தியாவுக்கு வருகிறார் ராகுல் காந்தி: சிவசேனா தாக்கு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப் பட்ட பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதற்கிடையே நாளை மறுநால் ஓய்வு பெறுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.
இதையொட்டி, அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் நேற்று பிரிவு உபசார விருந்து அளித்தார். விருந்துக்கு வந்த மன்மோகன்சிங்குக்கும், அவருடைய மனைவி குர்சரண் கவுருக்கும் மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பூங்கொத்து அளித்தனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கையெழுத்திட்ட நினைவுப்பரிசு பிரதமருக்கு வழங்கப்பட்டது.
புகைப்படம்...
அதில் பொறிக்கப்பட்டிருந்த பாராட்டு பத்திரத்தை மத்திய அமைச்சர் பல்லம் ராஜு வாசித்தார். விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மன்மோகன்சிங்குடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ராகுல் கலந்து கொள்ளவில்லை...
ஆனால், இந்த விருந்து நிகழ்ச்சியில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவர் கடந்த வாரமே பிரதமரை சந்தித்து தன்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று அவரிடம் கூறிவிட்டதாக அதிகராப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டனம்...
இந்நிலையில், பிரதமருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் ராகுல் கலந்து கொள்ளாததைக் கண்டித்து மற்ற கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
விடுமுறைக்கு வந்தவர்...
இது தொடர்பாக, சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், ‘ராகுல்காந்தி வெளிநாட்டை சேர்ந்தவர். விடுமுறைக்காக இந்தியா வருவார். அவரது வேலை முடிந்துவிட்டதும் அவரது வெளிநாட்டு வீட்டுக்கே திரும்பிவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
அவமதித்து விட்டார்...
பாஜக தலைவர் தருண் விஜய் கூறுகையில், ‘சீதாராம் கேசரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவமதித்தது போன்று ராகுல் காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கை பிரிவு உபசார விருந்தில் கலந்து கொள்ளாமல் அவரை அவமதித்து விட்டார்' என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவறான செயல்....
அதேபோல், 10 வருடங்களாக பிரதமராக இருந்த ஒருவருக்கு சிறப்பான பிரிவு உபச்சார விழா நடத்த வேண்டும். ராகுல் காந்தி கண்டிப்பாக கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் அபிமன்யு கூறியுள்ளார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications